“பச்சை பச்சையாக திட்டுவேன்” தர்சனுடன் காதலில் விழுந்த மீரா அதிரடி..!!
பிக் பாஸ் வீட்டிற்குள் காதல் மட்டும் எப்படி நுழைந்து விடுகிறதோ தெரியவில்லை. ஒரு பக்கம் கவின் காதல் ஓடிக் கொண்டிருக்க இன்னுமொரு பக்கம் மீரா மிதுனின் காதல் ஓடுகிறது. இன்றைய தினம் சாக்ஷியிடம் சென்று மீரா தர்சன் தன்னை காதலிப்பதாகவும் தனது தாயிடம் சென்று தன்னை பெண் கேட்பதாக கூறியதாகவும் கூற அதனை சாக்ஷி செரினிடம் கூற செரின் தர்சனிடம் கூறுகிறார்.
இந்த நிலையில் இன்று கமலஹாசன் இது பற்றி பேசும் போது மீரா முழு குற்றத்தையும் தர்சன் மீது சுமத்துகிறார். கமலஹாசன் பேசி முடிந்த பின் தர்சனுடன் தனியாக பேச வேண்டும் என கூறும் மீரா பேசுகிறார். ஆனால் தர்சன் பேச தயாராக இல்லை. உன் நட்பே வேண்டாம் என எழுந்து செல்கிறார். இந்த நிலையில் சாண்டி, சரவணன்,கவின் ஆகியோர் இருந்து பேசிக்கொண்டிருகின்றனர்.
வனிதா இல்லாமல் வீட்டுற்குள் சண்டை வராதே என்ன செய்வது என்று அப்போது அங்கு இருக்கும் மீரா ஏன் நான் இருக்கிறேன் என்கிறார். அதற்கு கவின் நீ அதற்கு சரி பட்டு வர மாட்டாய் என்கிறார். அதுக்கு என்னை பற்றி உனக்கு தெரியாது பொறுமையாக இருப்பேன் ஆனால் பின் பச்சை பச்சையாக கேட்பேன். என் வாய திறந்தால் பச்சை பச்சை வார்த்தைகள் தான் வரும் என கூறுகிறார்.
இதனை கேட்டுக் கொண்டிருக்கும் கவின் கொஞ்சம் கெளுத்திப் போட்டால் போதும் போல இருக்கே வெடிக்கும் போல என கூறுகிறார். உண்மையில் ஆரம்பத்தில் பாவம் என நினைத்த மீராவின் உண்மை முகம் இப்போது தான் மக்களுக்கு புரிகிறது..!!