“மாரடைப்பால் இறந்து போன கணவரே குழந்தையாக பிறந்துவிட்டார்.” நடிகை மேக்னா கண்ணீர்..!!
தமிழ், கன்னடம், தெலுங்கு என அசத்தி வந்த முன்னணி நடிகையான மேக்னா ராஜ்க்கு இன்று குழந்தை பிறந்துள்ளது. மேக்னா ராஜ் நடிகர் அர்ஜூனின் உறவினரும் கன்னட சினிமாவின் முன்னணி நடிகருமான சிரஞ்சீவியை பல வருடங்களாக காதலித்து 2018ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்,
திருமணமாகி மேக்னா ராஜ் 3 மாத கர்ப்பமாக இருந்த போது கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவி மாரடைப்பால் மரணமடைந்தார். திருமணமாகி 2 வருடங்கள் கூட வாழாத நிலையில் கணவரின் மரணம் மேக்னா ராஜை மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த நிலையில் குடும்பத்தினரின் ஆதரவுடன் கணவரே தனக்கு மகனாக பிறப்பார் என நம்பினார்.
பத்து வருட காதல் 2 வருடத்தில் முடிந்துவிட அனைத்து துயரத்தையும் துடைத்து ஆண் குழந்தை பிறந்துள்ளது.. மகனை கையில் ஏந்திய மேக்னா என் கணவரே எனக்கு மகனாக பிறந்துள்ளார் என்றே முதல் வார்த்தை பேசியுள்ளார். இதனை இரு வீட்டினரும் கொண்டாடி வருகின்றனர்..!