மொபைல் நம்பரை block செய்ததால் 19 வயது பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞன்.! விருதாசலத்தில் கொடூரம்..!
விருதாச்சலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியை சேர்ந்த 19 வயது யுவதியை அவரது காதலர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது தந்தை சுந்தரமூர்த்தி விருதாசலம் பகுதியில் ஹோட்டல் ஒன்றில் டீ மாஸ்டராக இருக்கிறார். மகள் திலகவதி. தனியார் கல்லூரியில் பி ஏ இரண்டாம் ஆண்டு கல்வி கற்று வந்துள்ளார்.
இவர் பள்ளி காலத்தில் இருந்து பேரளையூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விடுமுறையை ஆகாஷ் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாட்டில் போக்கியுள்ளார். திலகவதி பலமுறை ஆகாஷிற்கு கால் செய்தும் ஆகாஷ் திலகவதியின் கால் ஆன்சர் செய்யவில்லை.
இதனால் கோபமடைந்த திலகவதி ஆகாஷின் நம்பரை ப்ளக் லிஸ்டில் போட்டுள்ளார். திலகவதிக்கு கால் செய்துள்ள ஆகாஷ் தனது நம்பரை திலகவதி ப்ளக் செய்துள்ளதை அறிந்துகொண்டதுடன் நேராக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று திலகவதியுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட கோவத்தில் என் நம்பரை ப்ளக் செய்கிறாயா என கேட்டு திலகவதியின் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளார்.
வலியால் துடித்த திலகவதியை அப்படியே விட்டுவிட்டு ஓடியுள்ளார். இந்த நிலையில் திலகவதி தனது தாய் மாமாவானமகேந்திரனுக்கு கால் செய்து நடந்ததை கூறி தன்னை காப்பாற்றுமாறு அழுதுள்ளார். உடனடியாக வீட்டிற்கு வந்த மகேந்திரன் திலகவதியை விருதாசலம் அரச மருத்துவ மனைக்கு எடுத்து சென்றுள்ளார்.
அங்கு திலகவதியை பரிசோதித்த வைத்தியர்கள் அதிக இரத்த போக்கினால் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்கள். இந்த நிலையில் ஆகாஷை பிடித்த பொலிஸார் விசாரணை செய்த போது நடந்தவற்றை ஆகாஷ் கூறியுள்ளார். தற்போது கைது செய்யப் பட்டுள்ள ஆகாஷ் பொலீஸ் விசாரணையில் உள்ளதாக தெரிவிக்கப் டுகிறது..!