அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கோண்டுகோளுக்கு இணங்குமா இந்தியா.!? 24 மருந்துகள் ஏற்றுமதி தொடர்பில் வெளியான தகவல்..!!
கொரோனா வைரஸின் தாக்கத்தால் அமெரிக்காவின் நிலை மிக மோசமடைந்துள்ளது. கொரோனா வைரஸின் ஆரம்ப காலத்தில் பல நாடுகள் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்த போதும் அதை கண்டுகொள்ளும் நிலையில் அரசு இருக்கவில்லை. இதனால் தற்போது அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை தாடி உள்ளது.
33 கோடி பேர் வசிக்கும் நாட்டில் 4 லட்சம் பேர் பாதிப்பு என்பது எதிர் வரும் காலங்களில் இரு அதிகரிக்கலாம் என்பதையே குறிக்கிறது. இது வரை 12 ஆயிரத்திற்கு அதிகமானோர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவிற்கு இந்தியாவின் உதவி தேவைப் பட்டுள்ளது.
அமெரிக்கா மட்டும் இன்றி பல நாடுகளுக்கு இந்தியாவின் உதவி தேவைப் பட்ட போதும் இந்தியா மறுத்து வந்த நிலையில் அமெரிக்கா உதவியை கூட மிரட்டி பெற்றுக் கொள்ளப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளது. மற்றைய நாடுகளுடன் ஒப்பிடும் போது 130 கோடி சனத்தொகையை கொண்ட நாடான இந்தியா தனது நாட்டு மக்களை கவனமாக பாதுகாக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
இந்தியாவில் இதுவரை 5 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களுக்கான சிகிச்சைகள் உடனுக்குடன் நடக்கிறது. இந்தியா கொரோனாவை விட அதிக பலம் உள்ள நோய்களை எதிர்த்து போராடிய நாடாகும். இதற்கான காரணம் இந்தியாவிடம் இருக்கும் மருத்துவ வசதி. கொரோனா வைரஸில் இருந்தும் மக்களை இந்தியா அப்பிடி தான் காப்பாற்றுகிறது.
இந்த நிலையில் இந்தியா தன் மக்களுக்காக வைத்திருக்கும் மருந்துகள் மற்றைய நாட்டு மக்களை காப்பாற்ற தேவை படுகிறது. மலேரியாவிற்கு பயன்படுத்தும் மாத்திரை உட்பட 24 மாத்திரைகள் வேண்டும் என டொனால்ட் ட்ரம் இந்தியாவிடம் கேட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.!!