பிரதமர் மோடி ஜீ பேய்களுக்கும் உதவினார்.! எப்படி உதவினார் தெரியுமா.? நமீதா பேச்சால் அதிர்ந்த தொண்டர்கள்.! வைரலான வீடியோவால் வாயடைத்த மக்கள்.!!
சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் எச். ராஜா அவர்களை ஆதரித்து நடிகை நமீதா செய்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. காரைக்காலில் நமீதா பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் தமிழில் பேசுவதற்காக உரை எழுதிகொடுக்கப் பட்டது.
இதனை படித்து தனது பேச்சை தொடங்கிய நமீதா கொஞ்சும் தமிழில் அனைத்தையும் தவறாகவே பேசினார். தாமரைக்கு “ஒட்டு” போடுங்கள் அப்படி “பொட்டால்” Gas சிலிண்டர், இலவசம், “கொடும்ப” தலைவிக்கு 1500 மாதம் இலவசம், இருக்க “வீடோ” இலவச வாஷிங் மிசின், என தப்பு தப்பாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென
எமது பிரதமர் மோடி ஜீ “முத்ரா” திட்டத்தின் மூலம் “ஒங்களை” போல நிறைய “பேய்களுக்கு” உதவி செய்துள்ளார் என கூற ஒட்டுமொத்த தொண்டர்களும் அதிர்ந்து போயுள்ளனர். நிறைய பேருக்கு என்பதே நிறைய பேய்களாக மாறியது.
இறுதியாக தாமரை மலரும், தமிழ் நாடு வளரும் என கூறி உரையை முடித்தார். இதனை பார்த்த பலரும் மோடிஜி பேய்க்கும் உதவுகிறார் என கிண்டல் அடித்து வருகின்றனர்.!!