உங்கள் மனைவி கர்ப்பமாக இருந்தால் எந்த காரணத்தை கொண்டும் இந்த விடயங்களை செய்யாதீர்கள்…இவை குழந்தையை பாதிக்குமாம்..!!
ஒவ்வொரு பெண்ணும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது தாய்மையை தான். திருமணம் ஆனதும் என்ன தான் கஷ்டமாக இருந்தாலும் குழந்தை பெற்றுக் கொள்வோமே என்பதில் தொடங்கும் பெண்ணின் ஏக்கம். இன்று நாம் பார்க்கப் போவது கர்ப்பமான பெண்கள் இருக்கும் இடத்தில் என்ன என்ன விடயங்களை தவிர்க்க வேண்டும் எந்த எந்த விடயங்களை செய்ய வேண்டும் என்று தான்.
பெண்கள் கர்ப்பமாக இருக்கும் முதல் மாதங்களில் அடிக்கடி வாந்தி எடுப்பதுண்டு. இதனால் ஒரு வித சினத்துடன் இருப்பார்கள். இவர்களிடம் கணவர் எப்போதும் கோபமாக பேசக் கூடாது. முதல் மூன்று மாதங்கள் கர்ப்பமான பெண்களுக்கு அதிக வேலை கொடுக்க கூடாது. அதிர்ச்சியான செய்திகள் சொல்ல கூடாது, இவற்றை நீங்கள் செய்தால் கரு கலையும் வாய்ப்பு உள்ளது.
முடிந்த அளவு மூன்று மாதங்கள் தாம்பத்திய உறவை குறைத்துக் கொள்வது நல்லது. 3 மாதங்களின் பின் இருவரும் அருகில் அமர்ந்து பேச வேண்டும். சின்ன சின்ன வேலைகளில் ஆரம்பிக்கலாம். சிறிது தூரமாவது நடக்க வேண்டும். குழந்தையுடன் பேச ஆரம்பிக்க வேண்டும். 6 மாதங்கள் கடந்த பின் வயிற்றில். காதுகளை வைத்து கேட்ட படி குழந்தையுடன் பேச வேண்டும், நான் பேசுவதை குழந்தை நன்றாக கேட்க ஆரம்பிக்கிறது, அதனால் நல்லவற்றை பேச வேண்டும்.
குழந்தை பிறந்ததும் தேவையான பொருட்களை வாங்க கணவன் மனைவி இருவரும் செல்ல வேண்டும். இது உங்களுக்கு மட்டும் அல்ல குழந்தைக்கும் நல்லது. 6 மாதம் கடந்த பின் பெண்ணுக்கு நடை பயிற்சி முக்கியமாகும். முடிந்த அளவு நடக்க வேண்டும். அத்துடன் குழந்தையின் தந்தைக்கு இருக்க வேண்டிய கடமைகளில் ஒன்று புகைத்தல்,
அல்லது போதை பொருட்கள் பாவித்தால் விட்டுவிட வேண்டும் அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். இவற்றை கர்ப்பமாக இருக்கும் பெண் முன் பயன்படுத்த கூடாது. நீங்கள் புகைப்பது உங்களை மட்டும் இன்றி உங்கள் மனைவி குழந்தையையும் பாதிக்கும். அத்துடன் போதையில் கர்ப்பமாக இருக்கும் பெண்ணுடன் உறவில் இருக்க கூடாது. இதில் நடக்கும் தவறுகள் குழந்தையை பாதிக்கலாம். கர்ப்பமாக இருக்கும் பெண் என்பவளை கடவுளை சுமப்பவள் போலாவாள்.