தாய்மையடைய காத்திருக்கும் பெண்ணா நீங்கள்.? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்..! படித்து மற்றைய பெண்களும் அறிந்துகொள்ள பகிருங்கள்…!!
இந்த உலகில் மனித இனத்தின் நீடிப்பு என்பது பெண்களின் தாய்மை அடையும் தன்மையிலேயே தங்கியுள்ளது. எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்ட போதும் தாய்மையின் மகத்துவம் என்பது அனைவராலும் போற்றப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றது. சரி இந்த தாய்மை என்கின்ற நிலையயை அடைவதற்குப் பெண்களுக்கு எந்த வயது பொருத்தமானதாக இருக்கும்?
அட இதுக்கெல்லாம் என்னங்க பொருத்தமான வயசு என்று நினைக்கிறீங்களா? அதுதான் தவறு. ஒரு பெண் தாய்மை அடைவதற்கென்று சில சிறப்பான காலப் பகுதிகள் உண்டுதாய்மையடைவதற்கு உகந்த காலப் பகுதிகள் எவை?உலகளாவிய ரீதியிலான புள்ளி விபரக் கணக்கின்படி ஒரு பெண் தன்னுடைய இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதே மிகச் சிறந்த தாய்மைக்கான காலகட்டமாகக் கொள்ளப்படுகின்றது.
20 வயதிற்குக் குறைந்தோ அல்லது 30 வயதிற்கு மேற்பட்டோ குழந்தையைப் பெற்றுக்கொள்வது தாயிற்கு உடல் ரீதியாகவும் குழந்தைக்கு வளர்ச்சி ரீதியாகவும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கர்ப்பம் தரிக்கும்போது ஏன் துன்பங்களை எதிர்கொள்கின்றனர் தெரியுமா? பெண்களுக்கு வயதாக வயதாக இடுப்பு எலும்பு நெகிழ்ந்து குழந்தை வருவதற்கு சுலபமாக வழியை ஏற்படுத்திக் கொடுக்க முடியாமல் போய்விடுவதே பிரதான பிரச்சினை ஆகும்.
வயது முதிர்ந்த பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புக்களும் மூளை பாதிப்புக்களும் ஏற்படும் வாய்ப்புக்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் இனப்பெருக்க வயதிலிருக்கும் பெண்களின் முட்டைப் பையிலிருந்து கரு முட்டையானது 14 ஆம் நாளிலிருந்து 16 ஆம் நாளுக்குள் வெளிவருகின்றது. இதிலிருந்து 14 நாட்கள் கழித்து மாதவிடாய் வருகின்றது.
ஏதாவது மாற்றம் ஏற்பட்டாலோ முட்டை வெளியேறாவிட்டாலோ , வெடிக்காவிட்டாலோ கருவுறாமை பிரச்சினை ஏற்படகின்றது. வயது அதிகமாகும்போது முட்டையின் எண்ணிக்கை மற்றும் தரம் ஆகியன குறைகின்றன.எனவே தாய்மை அடைதலை தள்ளிப் போடுதலோ அல்லது தாமதித்தலோ பற்றி கொஞ்சம் ஆலோசித்துக் கொள்ளுங்கள். வளமான சந்ததி என்பது நம் கையில்தான்.