இறந்து போன மகனுடன் வீடியோ காலில் பேசும் தாய்.! கொரோனா வைரஸினால் நடந்த கொடுமையான சம்பவம்.!
இறந்த மகனுடன் தாயொருவர் வீடியோ காலில் பேசிவரும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள சிவில் மருத்துவமனை வாசலில் பெண் ஒருவர் மொபைல் போனில் வீடியோ காலில் ” மகன் சாப்பிட்டியா, தனிய இருக்க பயமா இருக்கா கவலை படாதே, உனக்கு ஒன்னும் ஆகாது, நீ குணமாகி வீட்டுக்கு வந்து விடுவாய் . உனக்கு பிடித்தது எல்லாம் சமைத்து தருவேன்” என கூறுகிறார்.
போன் ஆப் செய்யப் பட்டுள்ள நிலையில் யாருடன் குறித்த தாய் பேசுகிறார் என கேட்ட போது அவருடைய மகன் உடன் என்கிறார். இது பற்றி வைத்தியசாலை நிர்வாகத்திடம் கேட்ட போது கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்ட நிலையில் குறித்த தாயின் மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
மகன் வைத்தியசாலையில் இருக்கும் வரை வெளியே நின்றபடி மகனுடன் வீடியோ காலில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்த தாயால் மகனின் இறப்பை தாங்க முடியவில்லை. உறவினர்கள் வீட்டிற்க்கு கூட்டிச் சென்றாலும் திரும்பி வந்துவிடுகிறார். மகனின் மரணம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரது மரணத்தை தாயால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என கூறியுள்ளனர்.!!