புலிகளை இலங்கை அரசு அழித்த நாளே என் வாழ்வின் மகிழ்ச்சியான நாள்..! முத்தையா முரளிதரனின் பேச்சால் கோபத்தில் தமிழ் மக்கள்..!
புலிகளை அழிக்கப் பட்ட நாளே என் வாழ்வில் மகிழ்ச்சியான மற்றும் முக்கியமான நாள் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கூறியிருப்பது தமிழ் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வியத்கம என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்ட போதே முத்தையா முரளிதரன் இதனை குறிப்பிட்டிருந்தார். இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகால யுத்தம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களால் 2009ம் ஆண்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
யுத்தத்திற்கு காரணமாக இருந்த முக்கிய தலைவர் கொல்லப் பட்டார் அந்த நாள் தான் என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாள் என குறிப்பிட்ட முத்தையா முரளிதரன், புலிகளுக்கு ஏராளமான வாய்ப்பை இலங்கை அரசு வழங்கியது, பலமுறை சமாதானம் பேச அழைத்தது ஆனால் அதனை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்தவில்லை.
இதனால் தான் இந்த அழிவு ஏற்பட்டது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அரசியல் என்ன என்பதை புரிந்துகொண்டு அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய ஜனாதிபதி வேட்பாளருக்கு உங்கள் வாக்குகளை அளியுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..!!