பதவி விலகிய முஸ்லீம் அமைச்சர்கள் மற்றும் எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தற்போது திடீர் பேச்சு வார்த்தையில்..! மஹிந்தவுடன் இணைகிறார்களா !?
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன” கட்சியுடன் இணைவார்களா பதவி விலகிய முஸ்லீம் அமைச்சர்கள் என்ற கேள்வி தற்போது மக்களிடம் எழுந்துள்ளது. இதற்கான காரணம் இன்றைய தினம் இடம்பெற்று வரும் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச உடனான சந்திப்பு..!
நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து முஸ்லீம் அமைச்சர்கள் 9 பேர் பதவி விலகினார்கள். அத்துரலிய ரத்ன தேரர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மற்றும் ஆளுநர் அசாத் சாலி ஆகியோர் பதவி விலக வேண்டுமென ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தின் வெற்றியாக
9 அமைச்சர்கள் மற்றும் இரண்டு ஆளுநர்கள் பதவி விலகினார்கள். அதற்கான வர்த்தமானி அறிவிப்பும் இன்று வெளியானது. இந்த நிலையில் இன்று காலை கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச அவர்களின் இல்லத்தில் பதவி விலகிய முஸ்லீம் அமைச்சர்கள் உடனான சந்திப்பொன்று இடம் பெற்று வருகிறது.
ஏன் எதற்காக என்ற தகவல்கள் வெளியாகாத போதும் முஸ்லீம் மக்களின் பிரச்சனைகள் முன்வைக்கப் படலாம் என்றும் எதிர் வரும் தேர்தலில் தங்கள் ஆதரவை மகிந்த அணியினருக்கு முஸ்லீம் அமைச்சர்கள் வழங்கலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது..!