தாலி, மெட்டி, பூ, என அனைத்தையும் கழட்டிக் கொடுத்துவிட்டு கண்ணீருடன் சென்ற புதுமணப் பெண்..! நீட் தேர்வினால் தொடரும் கொடுமைகள்..!!
திருமணமாகி 4 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், தாலி, பூ மெட்டி என அனைத்தையும் கணவரிடம் கொடுத்துவிட்டு கண்ணீருடன் நீட் தேர்வு எழுத சென்ற சம்பவம் பார்ப்பவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்றைய தினம் தமிழகத்தில் 238 பரீச்சை மையங்களில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்களுக்கான நீட் தேர்வு நடைபெற்றது.
2 மணியில் இருந்து 5 மணி வரை நடைபெற்ற நீட் தேர்வுக்காக அதிகாலையில் இருந்தே மாணவர்கள் காத்திருந்தனர். வழமைக்கு அதிகமான பரிசோதனைகளின் பின் சமூக இடைவெளியை பின் பற்றி மாணவர்கள் நீட் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப் பட்டனர்.
இதன் போது தேர்வு எழுத வந்த தென்காசியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் காலில் அணிந்திருந்த மெட்டி தாலி உட்பட அனைத்தையும் கழட்டிக் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றுள்ளார்.
தென்காசியை சேர்ந்த வாசுதேவன் மற்றும் முத்துலட்சுமிக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில் நீட் தேர்வுக்காக தாலியை கூட கழட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்றதொரு சம்பவம் நெல்லையிலும் இடம்பெற்றுள்ளது..!!