நான் முதலில் ஸ்ரீலங்கன். தமிழன் பின்பு தான்..! மீண்டும் தமிழருக்கு எதிராக பேசிய முத்தையா முரளிதரன்..!!
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் தனக்கான ஒரு இடத்தை பதிய வைத்தவர் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன். இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளிதரன் இலங்கையில் பிறந்து இலங்கை தமிழர் என பலரும் கொண்டாடும் அளவிற்கு பல சாதனைகளை நிகழ்த்தியவர்.
தமிழ் நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்த முத்தையா முரளிதரன் தமிழ் நாட்டின் மருமகனானார். 2009 ம் ஆண்டு நடந்த யுத்தம் தொடர்பாக பேசி சர்ச்சைக்குள்ளான முரளிதரன் ஒட்டுமொத்த தமிழ் மக்களை அழித்தது சரியென கூறியிருந்தார்.
விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டால் தண்டனை கொடுப்பதில் தவறில்லை என்றும் தன் வாழ்வில் பிரபாகரன் இறந்த நாளே மகிழ்ச்சியான நாள் எனவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் இவருக்கு எதிராக பலர் குரல் கொடுக்க ஆரம்பித்தனர். அதன் பின் நான் தவறான அர்த்தத்தில் கூறவில்லை என் கூறி சமாளித்தார்.
ஆனால் தற்போது மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல் பேசி சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். அண்மையில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்த முத்தையா முரளிதரன் கடந்த சில நாட்களாக பலர் எனக்கு எதிராக பேசுகின்றனர். அது பற்றி எனக்கு எந்த கவலையும் இல்லை.
நாட்டை அழிக்க முயன்ற தீவிரவாத இயக்கமான புலிகளை அழித்ததில் மகிழ்ச்சி தான் எனக்கு.தமிழன் இப்படி பேசுகிறான் அப்படி பேசுகிறான் என கூறுகின்றனர். நான் முதலில் இலங்கையன், இலங்கை நாடு என் தாய் நாடு, இரண்டாவது தான் நான் தமிழன். நாட்டிற்கு எதிராக செயற்படுபவர்கள் தமிழர்கள் என்றால் எதிர்ப்பதில் தவறில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து என அவர் மேலும் தெரிவித்துள்ளார்..!!