சமந்தாவை பிரிந்த பின் வேறு காதலில் விழுந்தாரா நாக சைதன்யா.!? வைரலாகும் அவரே போட்ட பதிவு.!!
பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து 4 வருடங்கள் கூட வாழாமல் பிரிந்தவர்கள் சமந்தா நாக சைதன்யா ஜோடி. நடிகர் சித்தார்த்தை காதலித்து வந்த சமந்தா திடீரென அவரை பிரிந்தார். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டது. பின்னர் நாக சைதன்யாவுடன் ஜோடி சேர்த்து நடித்தார்,
அவருடன் காதல் ஏற்பட இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணம் செய்து நான்கு ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்த திருமண முறிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் சந்தேகம் காரணமாக பிரிந்ததாக கூறப்படுகின்றது. இந்த பிரிவில் சமந்தாவிற்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகின்றது,
ஆனால் நாக சைதன்யா பிரிவில் உறுதியாக இருந்தார். பிரிவின் பின் சமந்தா பல சோக பதிவுகளை போட்டார்.ஆனால் இன்றைய தினம் நாக சைதன்யா பதிவு ஒன்றை போட்டுள்ளார், “A Love Letter To Life ” என்ற புத்தகம் பற்றி எழுதியுள்ளார்.
திடீர் என்று வாழ்க்கைக்கு காதல் கடிதம் பற்றி நாக சைதன்யா புத்தகம் போட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது, சில நேரம் நாக சைதன்யாவிற்கு புது காதல் வந்துவிட்டதா என கேட்டு வருகின்றனர்.!