பொள்ளாச்சி பெண்கள் கற்பழிப்பு வழக்கில் புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை மிரட்டிய புகாரில் சிறை சென்று ஜாமீனில் வந்தவர் பார் நாகராஜ். இவர் பெண்கள் கற்பழிப்பிலும் சம்மந்தப் பட்டிருப்பதாக திருநாவுக்கரசு கூறிய வீடியோ வெளியாகியும் இவர் மீது எந்த ஒரு சட்ட நடவடிக்கையும் இவர் மீது எடுக்கப் படவில்லை.
இந்த நிலையில் பார் நாகராஜ் ஜெனிபர் என்ற பெண்ணை மிரட்டும் ஓடியோ ஆதாரம் வெளியாகி உள்ளது. அதில் சம்பத் மற்றும் சங்கீதா, கோகிலா மீது பொலீஸில் குடுத்திருக்கும் புகாரை வாபஸ் வாங்க கூறி மிரட்டியுள்ளார். இந்த கோகிலா மற்றும் சங்கீதா இவர்கள் இருவரும் காதல் எனும் பெயரால் இளைஞர்களை மயக்கி பின் பணம் பறித்து வந்த சகோதரிகள்.
இவர்களுக்கு இவரது அம்மா வளர்மதி உடந்தையாக இருந்ததாக நக்கீரன் ஏற்கனவே செய்தி வெளியிட்டு இருந்தது. இந்த பெண்களிடம் 25லட்சத்திற்கு மேல் கொடுத்து ஏமாந்தவர் தான் ஜூலியன்ராயர். அவர் திருமணம் முடித்துள்ள பெண் தான் இந்த பார் நாகராஜ் மிரட்டும் பெண் ஜெனிபர்.
பாலியல் துஷ்பிரயோக வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சதீஷ்குமாருடன் ஜெனிபர் வீட்டிற்கு சென்ற பார் நாகராஜ் ஜெனிபரிடம் சம்பத், கோகிலா, மீது கொடுத்துள்ள புகாரை உடனடியாக வாபஸ் வாங்குமாறு கூறி மிரட்டியுள்ளார். இதனை அவருக்கு தெரியாமலே ஜெனிபர் வீடியோ எடுத்து நக்கீரனிடம் கொடுத்தது மட்டும் இன்றி ஆடியோவையும் அனுப்பி யுள்ளார்.
ஜெயிலில் இருக்கும் சதீஷ் யார் என்றே தெரியாது என கூறி இருந்த நாகராஜனின் எப்படி அன்று சதிஷுடம் என்று மிரட்டி இருப்பான்? அப்படி ஆனால் எல்லாம் கூட்டு களவானிகள் தான். எப்போதும் உண்மையையை தோல் உறிக்கும் நக்கீரன் இம்முறையும் தனது கடமையை சிறப்பாக செய்துள்ளது.!