“ஒரு நாள் உன்னோடு வாழ்ந்தால் போதும்” எந்த குற்றமும் செய்யாத நளினிக்கு சிறை வாழ்க்கை ஏன் தெரியுமா? இதோ காதலால் தான்..!!
நேற்றைக்கு முன் தினம் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்தவர் நளினி. இவர் சிறைக்கு சென்றது இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் என்பது நாம் அறிந்தது தான். ஆனால் இந்த கொலைக்கும் நளினிக்கும் எந்த தொடர்பும் இல்லை உண்மையான காதலை தவிர என்பது தெரியுமா.? வாங்க பார்க்கலாம்.! 1990 ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு படகில் வந்தவர் தான் விடுதலை போராளி முருகன்.
19 வயதான முருகன் இந்தியா வந்ததும் தாஸ் என தனது பெயரைமாற்றிக் கொண்டார். சமூக ஆர்வலரான பாக்கியநாதன் அதாவது நளினியின் தம்பியுடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவர்கள் வீட்டில் தங்கிவிட்டார். பாக்கியநாதனின் அக்கா எங்கே என கேட்ட போது அவரது தாயார் என்னுடன் கோபித்துகொண்டு பெரியம்மா வீட்டிற்கு சென்றுவிட்டாள் என கண்ணீர் விட்டார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத முருகன் என்கிற தாஸ் தாயார் பத்மாவுடன் மகள் நளினியை சேர்த்து வைக்க முடிவு செய்தார். நளினியை சந்திக்க பெரியம்மாவீட்டிற்கு சென்றவருக்கு முதல் சந்திப்பிலேயே நளினியை பிடித்துவிட்டது. ஆனால் தனது மனதில் வைத்து காதலை மறைத்தார். தாயார் பத்மாவுடன் மகள் நளினியை சேர்த்து வைத்தார். இந்த நிலையில் இருவருமே காதலில் விழுந்துவிட்டனர்.
முருகன் காதலை சொல்ல தயங்குவதற்கான காரணத்தை புரிந்துகொண்ட நளினி கவலை படாதே உன்னுடன் வாழும் ஒரு நாள் எனக்கு போதும் அதன் பின் இறந்து போகிறேன் என கூற இருவரும் திருப்பதி சென்று ஏப்ரல் 22 இரண்டாம் திகதி திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் முடிந்து சரியாக ஒரு மாதத்தில் ராஜீவ் காந்தி சுட்டுக் கொள்ளப் பட்டார்.
அவ்வளவு தான் வாழ்க்கை வாழ்ந்து முடித்துவிட்டதாக தோன்றியது. ராஜீவ் காந்தி கொல்லப் பட்டதும் தணு சுட்டுக் கொன்றதும் செய்திகளில் வெளியானது கண்டிப்பாக முருகன் கைது செய்யப் படுவார் என்பது உறுதியானது. இதனை தொடர்ந்து நளினி மற்றும் முருகன் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
திருப்பதி சென்று இருவரும் உயிரை மாய்த்துக் கொள்ள பஸ்ஸில் ஏறிய நொடியில் இருந்து நளினி வாந்தி எடுக்கத் தொடங்கினார். பஸ்ஸால் இறங்கி மருத்துவ பரிசோதனை செய்த போது நளினி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. எங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் உரிமை எமக்கு இருக்கிறது ஆனால் எதுவும் அறியாத குழந்தையை கொலை செய்ய எமக்கு உரிமை இல்லை.
அதனால் முடிவை மாற்றிக் கொண்டு மீண்டும் பஸ்ஸில் ஏறினார்கள். பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த பொலீஸார் நளினி மற்றும் முருகனை கைது செய்தனர்.இரண்டு மாத கர்ப்பிணியாக சிறை சென்ற நளினி ஒரு புழு பூச்சியை கூட கொலை செய்யவில்லை உண்மையாக முருகனை காதலித்ததை தவிர. இவை அனைத்தையும் முருகன் தனக்காக வாதடிய வக்கீலிடம் கூறி இருந்தது குறிப்பிட தக்கது..!!