காமெடி நடிகர் நாஞ்சில் விஜயனின் கண் முன் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட அவரது தாய்..! காரணம் இது தான்..!!
சிலரது சிரிப்பின் பின் ஏராளமான வலிகள் இருக்கும் நாம் சிரிப்பை மட்டுமே பார்ப்போம் அதன் பின் இருக்கும் வலிகளை பார்ப்பதில்லை.பொதுவாகவே மற்றவர்களை சிரிக்க வைக்கும் பலரது நிஜ வாழ்க்கை முற்றிலும் சோகமானதாக இருக்கும். சார்லீ சாப்ளின் உட்பட பலரது வாழ்க்கையை தேடிப்பார்த்தால் புரியும். இன்று நாம் பார்க்கப் போவது பிரபல நடிகர் இல்லாவிட்டாலும் தொலைகாட்சிகளில் மக்களுக்கு பிடித்தவராக இருக்கும் நாஞ்சில் விஜயன் பற்றி தான்.
கறுப்பு, குள்ளம், என எத்தனை பேர் கிண்டல் செய்தாலும் என்னால் நீங்கள் சிரித்தால் மகிழ்ச்சி என சொல்லும் மிகவும் உயர்ந்த மனிதர். அப்பா போதைக்கு அடிமை.. உழைப்பதும் உழைத்த பணம் முழுவதையும் குடிப்பதும் பின் வீட்டில் மனைவியை அடித்து உதைப்பதும் மட்டுமே அவரது வேலை. எத்தனை நாள் தான் பெண் பொறுத்துக் கொள்வாள்.!?
பொறுமை இழந்தை நாஞ்சில் விஜயனின் தாயார் குழந்தைகளின் முன் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துகொண்டார். அநாதைகளாக நின்ற குழந்தைகளுக்கு பாட்டி அடைக்கலம் கொடுத்தார்.. படிப்பில் கெட்டிகரனான விஜயன் கல்லூரி படிப்பை முடித்தபின் என்ன செய்வதென தெரியாமல் முழித்து பின் விஜய் டிவியே கதி என சேர்ந்தார்.
கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலாவதாக வெளியேறினார். இருப்பினும் தொடர் முயற்சி அது இது எது நிகழ்ச்சியில் சிரிச்சா போச்சி டீமில் இணைந்தார். அதிக அளவில் பெண் வேடம் போட்டார். மக்கள் இவரை ரசிக்க தொடங்க தொலைகாட்சி, திரைப்படம் என நடிக்க ஆரம்பித்து விட்டார். இந்த நிலையில் அவரது இந்த பயணம் பற்றி கேட்ட போது ஆரம்பத்தில் ஏதாவது வேலை வேண்டும் என்று தேட தொடங்கினேன்.
என்னால் பாட்டி மிகவும் கஷ்டப் பட்டார், இதனால் எனக்கு வேலை கட்டாயமாக இருந்தது. கிடைத்த எல்லா வேலையும் செய்தேன். உணவு என்பது ஒரு வேளை தான். எப்படியோ இப்போது ஓரளவு நல்ல நிலைக்கு வந்துவிட்டேன். எனக்கு பெண் பார்க்கிறார்கள் அதனால் பெண் வேடத்தை குறைத்து வருகிறேன் என தெரிவித்துள்ளார்..!!