தகாத உறவுக்கு தடையாக இருந்த குழந்தைக்கு மதுவை கொடுத்து பெற்ற தாய் செய்த கொடூர செயல்..! இப்படியும் மிருகத்தனமான தாய்..!!
ஓசூர் பாகலூரை சேர்ந்த பெண் ஒருவர் தவறான உறவுக்கு தடையாக இருந்த பெற்ற குழந்தைக்கு மதுவை கொடுத்து பின் கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த நந்தினி மாதேஷ் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தையும் உள்ள நிலையில்
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். தனிமையில் இருந்ததால் அசோகன் என்பவருடன் நந்தினிக்கு ஏற்பட்ட பழக்கம் தகாத உறவாக மாறியது. அசோகன் மது போதைக்கு அடிமையானவர், இவர் நந்தினியையும் மதுவிற்கு அடிமையாக்கி உள்ள நிலையில் இருவரும் குடித்து விட்டு ஆட்டம் போட்டு வந்துள்ளனர்.
இது பல நாட்களாக நீடித்த நிலையில் நேற்றைய தினம் அசோகன் மற்றும் நந்தினி நன்றாக குடித்துள்ளனர். அப்போது குழந்தை விளையாடிக் கொண்டிருந்துள்ளது. உறங்கச் சொல்லியும் உறங்காததால் குழந்தையை அடுத்து துன்புறுத்திய நந்தினி குழந்தைக்கு கட்டாய படுத்தி மதுவை கொடுத்துள்ளார்.
குழந்தையின் அலறல் சத்தம் கெட்டு அயலவர்கள் வந்து பார்த்த போது குழந்தை மூச்சு விட கஷ்டப் பட்டுள்ளது. உடனடியாக குழந்தையை மீட்ட அயலவர் பாகலூர் சுகாதார மையத்தில் சேர்த்ததுடன் பொலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குழந்தை தொடர்ந்து இரத்த வாந்தி எடுப்பதால் மேலதிக சிகிச்சைக்காக ஓசூர் அரச மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். வலியுடன் வைத்திய சாலையில் துடித்துக் கொண்டிருக்கும் குழந்தை நயனாஸ்ரீ அம்மா அம்மா என முணங்குவது அங்குள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது..!!