19 வருடங்களின் பின் குழந்தை பெற்றுக் கொண்ட தாய்.! பிரபல பாக்கியலட்சுமி சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படங்கள்.!!
19 வருடங்களின் பின்னர் தனது தாயார் குழந்தை பெற்றுக் கொண்டதை நடிகை நேகா மோகன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2002ல் பிறந்த நேகா இதுவரை ஐந்திற்கு மேற்பட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.
இவர் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார். இனியா என்ற இந்த கதாப்பாத்திரம் தற்போது அதிகம் பேசப் பட்டு வருகிறது, இந்த நிலையில் நேகா என்கிற இனியா தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் 19 வருடங்களின் பின் என் அம்மா எனக்கு தங்கை ஒருவரை கொண்டு வந்திருக்கிறார்.
அம்மாவிற்கு நான் மட்டுமே இருந்தேன், எனக்கு தங்கை வேண்டும் என அடம்பிடித்தேன், தங்கை ஒருத்திவந்துவிட்டார்.
பலர் கேலி கிண்டல் செய்தார்கள், ஆனால் இந்த கேலி கிண்டல்களை நாம் கடந்துவிட்டோம், எனக்கு யார் என்ன சொன்னாலும் அது தேவை அற்றது, எனக்கு தங்கச்சி வந்துவிட்டாள். அம்மாவும் தங்கையும் நலமாக இருக்கிறார்கள் அது போதும் என குறிப்பிட்டுள்ளார்.!!
#PandiyanStores fame Neha's mother gives birth to a girl child . . ??? pic.twitter.com/XlXTuiqguY
— Anbu (@Mysteri13472103) March 23, 2021