உங்கள் வீட்டில் நெல்லிக்காய் பவுடர் இருந்தால் போதும்..ஏன் தெரியுமா.? படித்து பகிருங்கள்…!!
நம் வீட்டிலேயே பல மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் உள்ளது. அதை நாம் கண்டு கொள்ளவே மாட்டோம். ஆனால் அதுதான் பல பிரச்சனைகளிலிருந்து நம்மை காக்கும். ஆரஞ்சில் வைட்டமின் சி உள்ளதால் சருமப் பிரச்சனைகளை நீக்குகிறது. ஆரஞ்சு தோலுடன் துளசி இலையை அரைத்து பூசனால் முகப்பருக்கள் வராது.
துளசி இலையும் சந்தனமும் கலந்து பூசினால் எண்ணெய் பசை குறைந்து பருக்கள் வராது.சிலருடைய முகம் வடிவாக இருந்தாலும், ஒரு பொலிவு இருக்காது. பொலிவை பெற முல்தானி மெடடியுடன் ரோஸ் ரோஸ் வோட்டர் சேர்த்து அதனுடன் கொஞ்ச துளசி இலைகளை அரைத்து, சேர்த்து பூசவும்
20 நிமிடம் கழித்து கழுவவும். இதை வாரத்திற்கு 3முறை செய்யும். முகம் பொலிவுடன் மற்றவர்களை கவரும்.இன்றை சமுதாயத்தினருக்குள்ள ஒரு பிரச்சனை இளநரை. அதற்காக நாம் பலதை செய்கிறோம். ஆனால் துளசி இலையில் பல மருத்துவ குணம் உள்ளது.
இளநரையை எப்படி இலகுவாக போக்கலாம் என பார்ப்போம். துளசி இலையை அரைத்து, நெல்லிக்காய் பவுடர், ஒலிவ் ஒயில் 3யும் சேர்த்து தலையில் தடவி, 2மணி நேரம் கழித்து தலையை கழுவ வேண்டும் இதை வாரம் ஒரு முறை தவராமல் பின் பற்றினால் இளநரையிலிருந்து தப்பிக்கலாம்.
வெளியில் சென்று வந்தால் முகத்தில் அழுக்குகள் சேர்ந்து விடும். அழுக்குகளை நீக்க துளசி இலையை கொஞ்சம் அரைத்து முட்டை வெள்ளை கருவுடன் சேர்த்து பூசினால் அழுக்குகள் மட்டுமினறி முகத்திலுள்ள கிருமிகளையும் நீக்கிவிடும்.பொடுகு உள்ளவர்கள் துளசி எண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் எல்லாம் சமமாக எடுத்து, தலை முடிக்கு வைத்து வர, பொடுகு வராது.