நெஞ்சு சளியால் நுரையீரல் பாதிக்கப் பட்டு அவஸ்த்தை படுகிறீர்களா.!? இதோ இயற்கை முறையில் இலகுவான தீர்வு…!!
அன்றாடம் பலர் கஷ்டபடுகின்ற விடயங்களில் முதுகு வலி, நெஞ்சு சளி என சொல்லிக் கொண்டே போகலாம். பெரும்பாலானவர்களுக்கு நெஞ்சு சளி நீண்ட காலம் இருப்பதால் அவற்றால் நுரையீரல் பாதிக்கப் படுகின்றது. இது ஒரு பக்கம் இருந்தாலும் புகைத்தல், அசுத்தமான காற்றை சுவாசித்தல், அத்துடன் அதிகம் புகைப்பிடிப்பவர் அருகில் இருப்பது போன்றவற்றால் கூட நுரையீரல் பாதிக்கப் படுகின்றது.
தற்போது நாம் பார்க்கப் போவது இதற்கான தீர்வை தான்: இந்த மருந்தை செய்வதற்கு தேவையான பொருட்கள்: மஞ்சள் சிறிதளவு, வெங்காயம் பாதி, இஞ்சி சிறிதளவு, தேன். இவற்றை கொண்டு இன்றைய மருத்துவத்தை எப்படி ஒரு கப் நீருக்கு ஒரு inch அளவு இஞ்சி துண்டை எடுத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளுங்கள். பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றுங்கள்.
தண்ணீரில் இஞ்சி, மஞ்சள், மற்றும் சிறியதாக வெட்டிய வெங்காய பாதியையும் சேர்த்து கொதிக்க வையுங்கள். 10 நிமிடங்கள் வரை அளவான தீயில் கொதித்த பின் இறக்கி வடித்து ஆற வைய்யுங்கள். இருக்கும் அரை கப் நீரில் தேன் இரண்டு கரண்டி சேர்த்து மிக்ஸ் செய்து குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள். இப்போது குடிக்கும் முறையை பார்க்கலாம்.
அரை கப் நீரை மூன்றாக பிரித்து காலை உணவின் பின் ஒரு பங்கு, பகல் உணவின் பின் ஒரு பங்கு, இரவு உணவின் பின் ஒர பங்கு ஒரு நாளைக்கு மூன்று முறை குடியுங்கள். அதே போல் மறு நாளும் காலையில் செய்து மூன்று வேளை செய்யுங்கள். இப்படி தொடர்ந்து ஐந்து நாள் வரை குடித்தால் போதுமானது. நுரையீரல் சுத்தமாவதுடன் நெஞ்சு சளி, ஆஸ்த்துமா போன்ற நோய்களில் இருந்து விடுதலை கிடைகிறது..!!