திருமண முறிவின் பின் சமந்தா குத்திக் கொண்ட பச்சை.! யாருடைய பெயரை பச்சை குத்தினார் தெரியுமா.!?
திருமண முறிவின் பின் நடிகை சமந்தா சென்ற ஆன்மீக சுற்றுலா சென்றுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. நடிகை சமந்தா நாக சைதன்யா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
இவர்களின் பிரிவுக்கு பல காரணங்கள் கூறப்பட்ட போதும் கருத்து வேறுபாடு தான் பிரிவுக்கு காரணம் என இருவரும் உறுதியாக கூறி இருந்தனர். சமந்தா நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட பின் அவரது பெயரை உடலில் பச்சைக் குத்திக் கொண்டார்.
இந்த பச்சையை அழிப்பார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில் தற்போது நாக சைதன்யாவின் முதல் எழுத்தை இடுப்பு பகுதியில் மீண்டும் பச்சைக் குத்தியுள்ளாராம். திருமண முறிவின் பின் திரைப்பட வெற்றி விழா, பார்ட்டி என நாக சைதன்யா கொண்டாடிக்கொண்டிருக்க சமந்தா மன அமைதிக்காக கோயில் கோயிலாக சுற்றிக் கொண்டிருக்கின்றாராம்.
அண்மையில் சமந்தா தனது நெருங்கிய தோழியுடன் கோயிலுக்கு சென்று பிரார்த்தனை செய்துவிட்டு வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த பலரும் பாவம் சமந்தா என கூறி வருகின்றனர், ஆனால் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனராம். இனி சமந்தாவை திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்ய தடை இருக்காது என்பது தான் காரணமாம்.!