ஆபத்தை நோக்கி நகரும் இலங்கை ! அதிகரிக்கும் மரணங்கள்.!!
இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கம் வேகமாக பரவி வரும் நிலையில் இன்றைய தினம் நாடு தழுவிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது, இன்றில் இருந்து வரும் 17ம் திகதி வரை ஊரடங்கு இருக்கும் என அறிவித்துள்ள அரசு 17ம் திகதில் இருந்து 31ம் திகதி வரை மாநிலங்கள், மற்றும் மாவட்டங்களுக்கிடையிலான பயணத் தடை இருக்கும் என அறிவித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனா இலங்கையில் கொரோனா மரணங்கள் மிக வேகமாக அதிகரித்து வருகின்றது, நாளொன்றுக்கு 20திற்கு மேற்பட்ட மரணங்கள் பதிவாகி வருகிறது. நேற்றைய தினமும் 24 மரணங்கள் பாதிவாகியுள்ளது. இது வரை இலங்கையில் 1 லட்சத்து 35 ஆயிரத்து, 796 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 892 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த நிலை தொடர்ந்தார் இனி வரும் காலங்களில் மரணங்களில் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இறப்பு வீதம் அதிகம் என கூறப்படுகின்றது.!!