திருமண பேனரில் நித்தியானந்தாவின் புகைப்படத்தை சேர்த்த இளைஞர்கள்..! காரணம் இது தானாம்..!!
கடந்த சில மாதங்களாக அதிகம் வைரலானவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் நித்தியானந்தா தான். குழந்தை கடந்தல், பாலியல் பலாத்காரம், ஆபாச வீடியோக்கள் என இந்தியாவையே கலக்கினார். இந்தியா பொலீஸார் தேடி அலைய அடிக்கடி இணையத்தில் கூலாக வீடியோ வெளியிட்டார்.
இதனால் மக்கள் மத்தியில் அதிகம் வைரலான நித்தியானந்தா தற்போதும் பொலீஸாரால் தேடப் பட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழ் நாட்டில் இடம் பெற்ற திருமணம் ஒன்றில் பேனரில் நித்தியானந்தாவின் புகைப்படத்தை இளைஞர்கள் பதிவிட்டுள்ளனர்.
இதனை பார்த்த மக்கள் வாழப் போகும் ஜோடி சர்ச்சைக்குரிய நித்தியானந்தாவின் புகைப்படத்தை பேனரில் சேர்த்திருப்பது பற்றி கேட்டதற்கு எந்த காரணமும் இல்லை. கடந்த வருடம் நித்தியானந்தா செய்திகள் வைரலானதால் விளையாட்டாக செய்தோம் தற்போது நானும் வைரலாகி விட்டோம் என குறிப்பிட்டுள்ளனர்..!!