நித்தியானந்தாவின் “கைலாசா” செல்ல ஆசையாக இருந்தவரா நீங்கள்.? இதோ உங்களுக்கும் வாய்ப்பு.. விண்ணப்ப படிவத்தை நிரப்பி, மின் அஞ்சல் செய்யுங்கள்..! விபரம் உள்ளே..!!
பாலியல் துஷ்பிரயோகம், குழந்தை கடந்தல், கொலை, தேச துரோகம் உட்பட பல குற்றங்களுக்காக பொலீஸாரால் தேடப் பட்டு வருபவர் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா. என்ன தான் தேடினாலும் “நீங்கள் தோண்டிய குழியில் சிறுத்தை வேண்டுமானால் சிக்கும் சில்வண்டு சிக்காதுலே” என கழுவும் மீனில் நழுவும் மீனாய் இருக்கிறார் நித்தியானந்தா.
இந்தியாவில் பல இடங்களில் ஆசிரமங்கள், பக்தர்களாக வெளி நாட்டு, உள்நாட்டு பெண்கள் என இருந்த நித்தி இதெல்லாம் வேண்டாம் என சொந்தமாக இடம் வாங்கி நாடாக்கிக் கொண்டார். நாட்டிற்கு கைலாஸா என பெயர் வைத்ததுடன், கைலாசா நாட்டிற்கான பாஸ்போர்ட், கரண்சி என அனைத்தையும் அறிவித்தார். அப்படி ஒரு நாடு இருக்கா இல்லையா என தேடி கொண்டிருந்தவர்களுக்கு தற்போது அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசா செல்பவர்களுக்கு டிக்கெட் ப்றீ என்றும், அங்கு சென்று சிவனடியார்களாக மூன்று நாட்கள் தங்க முடியும் என்றும் அறிவித்தார். இந்த மூன்று நாட்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து கைலாசா வந்து செல்லும் பயண செலவுகள் இலவசம் என நித்தியானந்தா அறிவித்துள்ளார்.
அது மட்டும் இன்றி கைலாசா நாட்டிற்கு செல்ல விரும்பம் உள்ளவர்கள் மின் அஞ்சல் ஊடாக விண்ணப்பிக்க முடியுமாம். இங்கு செல்பவர்கள் மூன்று நாட்கள் மட்டுமே இருக்க முடியும் என கூறியுள்ள நித்தியானந்தா இது முழுவதும் இந்துக்களின் தேசம், யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் சிவ வழிபாடுகள் முக்கியம். அத்துடன் மூன்று நாட்களுக்கு மேல் இருக்க கூடாது.
மின் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க “.கைலாசா” என்ற வெப் சைட்டிற்கு சென்று அங்கிருக்கும் மின் அஞ்சல் முகவரிக்கு உங்கள் முழுவிபரம், மற்றும் என்ன தேவை என்பது விண்ணப்ப படிவத்தில் இருக்கும். உங்கள் ஆசையை நிறைவேற்றலாம் இனி..ஜெய் நித்தியானந்தா..!!