“தினமும் கணவர் என் மீது சிறு நீர் கழிக்கிறார்” மனைவி பரபரப்பு புகார்…!!
கணவர் தன்மீது சிறு நீர் கழித்ததாக கூறி பெண் ஒருவர் புகார் கொடுத்த சம்பவம் வைரலாகி வருகிறது. உத்திரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த நீத்து என்ற பெண்ணே இவ்வாறு கடிதம் மூலம் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவித்துள்ளார்.
அத்துடன் வீடியோ ஒன்றையும் நீத்து பதிவு செய்து இணையத்தில் வைரலாக்கி உள்ளார், குறித்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, எனது கணவன் உத்திரப்பிரதேச “மிகவும் பிற்படுத்தப்பட்ட வர்க நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவராக” இருக்கிறார்” ஆரம்பத்தில் என்னுடன் அன்பாக இருந்த போதும் பின்பு கொஞ்சம் கொஞ்சமாக கொடுமையை ஆரம்பித்தார், அடித்து உதைத்தார்,
அதன் பின் துப்பாக்கியை வைத்து கொலை செய்வதாக மிரட்டினார், என்னை மட்டும் இன்றி என் குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக கூறினார். தற்போது நான் தூக்கும் போது ம்ட்டும் இன்றி சாப்பிடும் போதும் என் மீது சிறு நீர் கழிக்கிறார், இதனை நான் பலமுறை இங்குள்ள பொலீஸில் புகார் கொடுத்தேன் ஆனால் பணத்தை கொடுத்து பொலீஸாரை வாங்கிவிட்டார்.
அதனால் எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நீத்துவின் கணவர் பாபுராம் குறிப்பிடுகையில் என்னிடம் இருந்து பணம் பறிக்கவே இவ்வாறு செய்கிறார். அத்துடன் நானும் நீத்து மீது புகார் கொடுத்துள்ளேன் என கூறியுள்ளார்..!!