கொரொனா நோயாளிகளை கவனித்து வந்த “தாதி அமீரா ” கொரோனா வைரஸ் தாக்கத்தால் மரணம்..! சோகத்தில் குடும்பம்..!!
கொரோனா வைரஸ் என்றாலே மரணம் என்பதாக மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தங்கள் உயிரை பணயம் வைத்து எங்களுக்காக போராடிக் கொண்டிருப்பவர்கள் மருத்துவர்கள் மற்றும் தாதிகள் தான். அப்படி கொரோனா வார்ட்டில் பணி புரிந்த அமீரா நஸ்ரின் என்பவர் கொரொனா வைரஸ் தாக்கத்தினால் இன்று மரணமடைந்துள்ளா.
36 வயதாகும் அமீரா கடந்த 16 வருடங்களாக பிரித்தானியாவின் Walsall Manor வைத்தியசாலையில் பணி புரிந்து வந்த நிலையில் கொரொனாவால் பாதிக்கப் பட்டவர்களை கவனிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 16ம் திகதி இவருக்கு கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை செய்துகொண்ட போது கொரோனா வைரஸ் என்பது உறுதியானது.
அதன் பின் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த அமீரா இன்றைய தினம் மரணமடைந்துள்ளார். இது குறித்து வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கையில் கடந்த 16 வருடங்களாக எந்த வித நோயாளும் பாதிக்கப் படவில்லை.
உடல் ஆரோக்கியத்துடன் இருந்தார். அமீராவின் மரணம் மிகப் பெரிய இழப்பு என தெரிவித்துள்ளனர். திருமணமாகி மூன்று குழந்தைகளின் தாயான அமீராவின் இழப்பு வைத்தியசாலைக்கு மட்டும் அல்ல அவரது குடும்பத்தினருக்கும் மிகப் பெரிய இழப்பு தான்…!!