IT துறையில் பணி புரிபவரா நீங்கள்.? உடல் உஷ்ணத்தால் அவஸ்த்தை படுகின்றீர்களா.? இதில் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள்..!!
உடல் சூடு என்பது ஆண் பெண் இருபாலருக்கும் இருந்தாலும் இதனால் அதிகம் பாதிக்கப் படுவது ஆண்களே. சிலருக்கு எப்போதும் உடல் வெப்பநிலையானது அதிகமாகவே இருக்கும். அவர்கள் உட்கார்ந்திருந்த இடங்கள் சூடாக இருக்கும். இதற்கு நம்முடைய பல்வேறு பழக்க வழக்கங்களும் காரணமாக அமைந்து விடுகின்றன.
தற்போது நிலவி வரும் பருவநிலை மாற்றத்தால்நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது, இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது,இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது.இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி மற்றும் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது.
உடற்சூட்டைக் குறைப்பதற்கு நாம் பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம். நல்லெண்ணெய். பூண்டு. மிளகு.செய்முறை: நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் இலேசாக சூடாகியதும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை காலின் (இரு கால்) பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விடவேண்டும்.
2 நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும்.2 நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்கக் கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம்.மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள்.
வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.அந்தக் காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும்என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம்.
ஏனெனில், இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில்குழந்தை உருவாகுமாம்.இதனை IT துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும்.மேலும், சிறியவர்களாக இருந்தால் வாரத்தில்இருமுறை இதனை செய்யலாம்.