படையினர் மீது கல்லெறிய சம்பளம் ..? உ.பி.மாநில தொழிலாளர்களால் பரபரப்பு..!
லக்னோ : ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் வேலைக்குச் சேர்ந்த, உ.பி.,யைச் சேர்ந்த ஆறு பேர், தங்களுக்கு, பாதுகாப்பு படையினர் மீது கல்லெறியும் வேலை தரப்பட்டதாக, பொய் கூறியது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார்.
இம்மாநிலத்தின், பாக்பாட், ஷஹாரன்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு பேர், ஜம்மு – காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில், டெய்லர் வேலைக்காக சென்றனர். சமீபத்தில், சொந்த ஊர் திரும்பிய அவர்கள், தங்களை வேலைக்கு அமர்த்திய நபர், மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாக கூறியதாகவும், பின், புல்வாமாவில் உள்ள தொழிற்சாலையில், தங்களை அடைத்து வைத்ததாகவும் கூறினர்.ஒரு சமயம், அந்த தொழிற்சாலையில் பணியாற்றும் அனைவரையும், பாதுகாப்பு படையினர் மீது கற்களை எறியும்படி நிர்ப்பந்தம் செய்ததால், உ.பி.,க்கு திரும்பியதாகவும் கூறினர்.
ஆனால், உ.பி., மாநில, டி.ஜி.பி., – ஓ.பி.சிங், இந்த தகவலை மறுத்துள்ளார்; அவர் கூறியதாவது:உ.பி.,யில் இருந்து, ஜம்மு – காஷ்மீருக்கு வேலைக்குச் சென்ற இவர்கள், அங்குள்ள தொழிற்சாலையில், சில பொருட்களை திருடியுள்ளனர். போலீசார் தேடியதும், இங்கு தப்பி வந்துள்ளனர். ஆனால், இந்த விஷயத்தை மறைத்து,பாதுகாப்பு படையினர் மீது கல்லெறியும்படி, தாங்கள் நிர்ப்பந்தம் செய்யப்பட்டதாக போலீசில் பொய் புகார் அளித்துள்ளனர். இது குறித்து, உ.பி., மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினர்.
nanri dinamalar