பெண் பொலீஸ் ஆய்வாளரின் குரலில் மயக்கிய கொலை குற்றவாளி…! பின் நடந்த அதிரடி திருப்பம்..!!
கொலை, கொள்ளை, உட்பட 15 திற்கு மேட்பட்ட வழக்குகள் பதியப்பட்டதுடன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பொலீஸார் தேடி வந்த நபர் ஒருவரை இளம் பெண் பொலீஸ் அதிகாரி ஒருவர் அசால்ட்டாக கைது செய்த சம்பவம் ஒன்று மத்திய பிரதேச மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.
பயங்கரமான கொலைகள் செய்த பால்கிஷன் சோபே என்ற 28 வயது இளைஞன் சிறையில் இருந்து தப்பிச்சென்று தலை மறைவாகி இருந்ததுடன் மறுபடியும் கொலை கொள்ளைகளில் இறங்கியுள்ளான். இவனை கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப் பட்ட போதும் பொலீஸாரின் கண்ணில் மண்ணை தூவி தப்பிச் சென்று விடுவான்.
பால்கிஷான் தொடர்பாக தகவல் தருபவர்களுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை சன்மானம் வழங்கப் படும் என பொலீஸார் அறிவித்தும் சிக்கவில்லை. இந்த நிலையில் பால்கிஷனுக்கு ரகசியமாக பெண் தேடுவது தெரியவந்தது. திருமணத்திற்கு பெண் தேடுவதற்கு ரகசிய தொலைபேசி இலக்கம் ஒன்றையும் அறிவித்திருந்தனர்.
இதனை சாதகமாக பயன் படுத்த நினைத்த பெண் ஆய்வாளர் மாத்வி அக்னிஹோத்ரி பால்கிஷனை திருமணம் செய்ய ஆசைப்படுவதாக தொலைபேசியில் பேசியுள்ளார். வெறும் 4 நாட்களில் மாத்வியை முழுமையாக நம்பிய பால்கிஷன் சந்திக்க வேண்டும் என்றும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தால் திருமணம் செய்து கொள்வோம் எனவும் கூறியுள்ளார்.
இதற்கு முதலில் மறுப்பு தெரிவிப்பது போல் நடித்துவிட்டு பின் சம்மதம் சொன்ன மாத்வி காத்திருந்துள்ளார். டூ வீலரில் மாத்வி அருகில் வந்த பால்கிஷனை பதுங்கி இருந்த பொலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இது தொடர்பாக மாத்வி குறிப்பிடுகையில் தொடரும் கொலைகளை தடுக்க வேறு வழி தெரியவில்லை.. அதனால் ரிஸ்க் எடுத்தேன்.கடைசியில் வெற்றியும் கிடைத்து விட்டது என கூறியுள்ளார்..!!!