பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த இளம்குடும்பஸ்தர்…!!!
திருகோணமலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றும் பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
மேலும் இந்த சம்பவம் குறித்து கோமரங்கடவல வைத்தியசாலையில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஒப்பந்தகாரர்களில் ஒருவர் பெண் வைத்தியர் தங்கியிருக்கும் பகுதிக்கு அருகில் உள்ள பழைய மலசல கூடங்களை நிர்மாணிப்பதற்காக குறித்த பகுதியை காட்டுமாறு பெண் வைத்தியரிடம் கூறினார்.
இதனை தொடர்ந்து பெண் வைத்தியர் ஒப்பந்தகாரர் உடன் சென்று அந்த பகுதியை காண்பித்தார். அந்த வேளையில் குறித்த நபர் பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்வது போல் அரவணைத்ததாக பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இந்த புகாரில் இளம் குடும்பஸ்தரை கைது செய்துள்ளதாகவும், அவரை இன்று 23ஆம் திகதி திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் கோமரங்கடவல பொலிஸார் தெரிவித்துள்ளார்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.