பள்ளிகள் மீது தாக்குதல் நடாத்தினால் – இலங்கையில் யுத்தம் ஆரம்பமாகும் – வவுனியா மௌலவி அதிரடி! வீடியோ இணைப்பு!!
இந்தப் பதிவினை பகிர்ந்த நோக்கம், மேற்படி விஷம கருத்துக்களை கூறியவருக்கு தண்டனை கிடைக்கனும், இவரது இந்த நாசகார கருத்தினை நம்பி மக்கள் யாரும் ஏமாற கூடாது என்பதற்காக, புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி
ஸ்ரீலங்காவில் இனி வருங் காலத்தில் இஸ்லாமிய சமுதாயம் மீது தாக்குதல் நிகழ்த்தப்படுமாயின், முழு இலங்கையும் பாரிய அழிவிற்கும் , அனர்த்தத்திற்கும் உள்ளாகும் என வவுனியா பள்ளி வாசல் மௌலவியும், ஸ்ரீலங்கா அமைச்சர் ரிசார்த் பதியுதீன் அவர்களின் நெருங்கிய அரசியல் ஆதரவாளருமான முனாஜித் அவர்கள் அனல் பறக்கப் பேசியுள்ளார்.
இதே வேளை இந்தக் காணொளியில் தேசிய தௌபீக் ஜமாத் அமைப்பினை வாழ்த்தி, இனங்களுக்கிடையே பிரிவினைவாத தாக்குதலை ஏற்படுத்தும் வகையில் முனாஜித் முக நூல் நேரலையில் வழங்கிய பேச்சினை இங்கே பகிர்கின்றோம். இது செய்தியின் ஆதாரத்திற்காக இணைக்கப்பட்டுள்ளதே தவிர, வன்முறையைத் தூண்டும் வகையில் அல்ல. இவரது பேச்சினை பின் பற்றி யாரும் நாசகார செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.