பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து வெளியேறும் பிரபல நடிகர்.! காரணம் என்ன.? இதோ..!!
தொலைகாட்சி சீரியல்களில் குடும்பத்தினருடன் இருந்து ரசித்து பார்க்கக் கூடிய சீரியல்களில் ஒன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” இந்த சீரியலில் நடித்து வந்த நிலையில் இடையில் அனைவரையும் விட்டு நிரந்தரமாக பிரிந்தவர் நடிகை சித்து. இவரது மரணத்தின் பின் சித்துவின் கதாபாத்திரத்தை காவ்யா ஏற்று நடித்து வருகிறார்.
இந்த நிலையில் முல்லையின் ஜோடியாக நடித்து வந்த குமரன் சீரியலை விட்டு விலகி விட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என்றும் குமரன் திரைப்படம் ஒன்றில் நடித்து வந்ததால் சில நாட்கள் வரவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டது.
இந்த நிலையில் சில வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சில பிரிவுகள் நிரந்தரம் என்றும் கதிர் என்கிற குமரன் சோகமான பதிவொன்றை இட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலை விட்டு வெளியேற போகிறீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு ஆம் என்பது போல் பதில் அளித்துள்ளார் கதிர்.!!