பாடையில் படுத்திருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை லக்ஷ்மி அம்மாவிற்கு செய்யப் பட்ட பரிகாரம்.! இவ்வளவு இருக்கா என வியக்கும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படங்கள்.!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இறந்தது போல் பாடையில் படுத்திருந்த லக்ஷ்மி அம்மாவிற்கு பரிகார சடங்குகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினரால் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் கை, கால் கட்டி மரணித்தது போல் அழுது, சடலத்திற்கு சடங்குகள் செய்வது போல் செய்வார்கள்.
ஆனால் இது நடிப்பவருக்கு நல்லதல்ல என்பதால் இந்த காட்சிகள் எடுத்து முடிந்ததும் சில பரிகார சடங்குகள் செய்வதுண்டு. அப்படி இம்முறை லக்ஷ்மி அம்மாவாக நடித்த நடிகை ஷீலாவிற்கு செய்துள்ளார்கள். இதன் படி முதலில் பூசணிக்காயால் திருஷ்டி சுற்றிவிட்டு, பின்னர் முறையே எலுமிச்சை, தேங்காய், கற்பூரம் என ஒவ்வொன்றாக திருஷ்டி சுற்றியுள்ளனர்.
இதன் புன்னர் லக்ஷ்மி அம்மா குளித்துவிட்டு தான் அவரது வீட்டுக்கு போக வேண்டுமாம். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருகின்றது, இந்த காட்சிகளின் பின்னர் இவ்வளவு இருக்கிறதா என பலரும் கேட்டு வருகின்றனர்.!