நடிகர் பாண்டியராஜன் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா.!? அவரே வெளியிட்டுள்ள விடயம்.!!
முட்டைக் கண், குள்ளமான அதே நேரம் ஹீரோவாக யாராலும் கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத தோற்றம், இப்படியான ஒருவர் தமிழ் சினிமாவில் கொண்டாடப் பட்டவர்களில் ஒருவராக இருக்கிறார். யார் அவர் என்றால் பாண்டிய ராஜன் தான்.
அண்மையில் நடந்த விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட பாண்டியராஜன் தனது வாழ்வில் தான் பட்ட கஷ்டங்களையும் கடந்து வந்த பாதையையும் தெரிவித்துள்ளார். அதில் படிப்பில் அதிக ஆசையுள்ள நான் படித்துக் கொண்டே சினிமாவில் முயற்சித்தேன், ஹீரோவாகும் எண்ணம் இருக்கவே இல்லை, உதவி இயக்குனராக இருந்தேன், பின் இயக்குனராகும் முயற்சியில் இருந்ததுடன் ஆசிரியராகவும் பணி புரிந்தேன்.
அப்போது திரைப்படம் எடுக்கும் எண்ணம் வந்தது ” ஆண் பாவம் ” என்ற திரைப்படத்தை எடுத்தேன். நம்பவே முடியவில்லை, திரைப்படம் பிரமாண்ட வெற்றி பெற்றது, ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடினார்கள். நடந்து போய்கொண்டிருந்த நான் ஒரே திரைப்படத்தில் கார் எடுத்தேன், சொந்த வீடு எடுத்தேன், அதன் பின் என் வாழ்க்கை முற்றிலும் மாறியது.
என் வாழ்க்கை இப்படி மாறும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு திரைப்படம் என் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியது… ஒரு திரைப்படம் மூலம் பணக்காரன் ஆனேன், அதாவது ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப் பட்ட எனக்கு சொத்த வீடு எடுக்க முடிந்தது. எல்லாம் ஆண் பாவம் திரைப்படத்தால் கிடைத்த வரம் என தெரிவித்துள்ளார்…!!