ஒரே நாளில் தமிழ் சினிமா நடிகர்கள் மூவர் மரணம்.! இன்றைய தினம் மரணித்தவர்கள் இவர்கள் தான்.!
இன்றைய தினம் மட்டுமே தமிழ் சினிமாவை சேர்ந்த மூன்று பேர் மரணமடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த நகைச்சுவை நடிகர் பாண்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
இவரை தொடர்ந்து கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த ஒவ்வொரு பூக்களுமே புகழ் கோமகன் மரணமடைந்தார். இது ஒரு பக்கம் இருக்க நடிகர் டீ ராஜேந்தரை திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய இயக்குனர் “ஒரு தலை ராகம்” திரைப்பட புகழ் இப்ராஹிம் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார்.
இந்த மூவரின் மரணமும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை சுமார் தமிழ் சினிமாவை சேர்ந்த சுமார் 10 வரை மரணமடைந்துள்ளனர்.