பாண்டியா சகோதரர்களின் சோகக்கதை!
இந்தியாவின் புகழ் மிக்க வீரராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஹர்திக் பாண்டியா.
அண்மையில் இவர், செர்ஜியாவின் புகழ்பெற்ற நடிகையான நடாசா ஸ்டான்கோவிக்கைக் கைப்பிடித்தார்.
இவரது வாழ்க்கை தற்போது உயர்தரமாக அமைந்து போய்க்கொண்டிருக்கிறது.
இவர், கிரிக்கெட் உலகுக்கு ஐ.பி.எல். மூலமே வெளியே தெரிந்தார். இவரும் இவரது சகோதரர் க்ருனால் பாண்டியாயாவும் தற்போது இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, தனது இளமைக் கால வேதனை கலந்த பகுதிகளைப் பகிர்ந்துள்ளார் ஹர்திக்.
இளமைக்காலத்தில் கிரிக்கெட் பயிற்சி பெற்ற ஹர்திக் பண்டியா மற்றும் அவரது சகோதரர் க்ருனால், பரோடா அணிக்காக 16 வயது மற்றும் 19 வயது அணிகளில் ஆடி வந்தனர். அப்போது அவரது தந்தை உழைத்தே குடும்பத்தைப் பார்த்து வந்தார்.
எனினும், தந்தை சுகயீனம் காரணமாக வேலையை விட வேண்டி நேர்ந்தது.
அப்போது ஹர்திக் மற்றும் க்ருனால் சகோதரர்கள் பரோடா அணியில் விளையாடி வந்ததன் மூலம் அவர்களுக்கு வருடத்துக்கு 35 ஆயிரம் ரூபா கிடைத்தது. அதை வைத்துத்தான் அவர்கள் குடும்பத்தைப் பார்க்கவேண்டியிருந்தது.
ஆனாலும், இருவரும் ஒரே காலப்பகுதியில் அந்த அணியிலிருந்து விலக நேர்ந்தது.
இதனால், கிரிக்கெட் விளையாடிக் கிடைக்கும் வருமானமும் இல்லாமல் போக அவர்களது குடும்பம் பெரும் கஷ்டத்துக்குள் தள்ளப்பட்டது.
அப்போதுதான் தான் மனதை இறுக்கிக் கொண்டு கிரிக்கெட்டுக்காகக் கடுமையாக உழைத்தார் எனக் கூறியுள்ளார் ஹர்திக்.
அவரது அந்தப் போராட்டமே, இன்று இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக அவரை நிலை நிறுத்த உதவியுள்ளது.