இந்தியா உட்பட உலகின் மிக மோசமான சுற்றுலா தளங்கள் 5.! அவதானம் மக்களே…!!
வீட்டிற்குள், கிராமத்திற்குள், ஒரே நாட்டிற்குள் அடைப்பட்டு கிடக்க யாரும் விரும்புவதில்லை. பட்டாம்பூச்சி போல் பறந்து திரியவே ஆசை படுவார்கள். ஆனால் எல்லோருக்கும் அந்த வாய்ப்புகள் கிடைப்பதில்லை. சிறகுடைந்த பறவைகள் போல் ஊர் விட்டு ஊர் செல்லவே முடியாமல் பலர் இன்றளவும் வாழ்கின்றனர். ஆனால் சிலருக்கு நினைத்த இடத்திற்கு நினைத்த நேரத்தில் செல்லும் வாய்ப்பும், பணமும் இருக்கிறது.
வசதியும் வாய்ப்பும் இருந்தாலும் மக்கள் போககூடாத சில இடங்கள் பற்றி இன்று பார்க்கப் போகின்றோம். எகிப்தில் உள்ள “Cairo” சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமான இந்த இடத்தில் ஆரம்ப காலங்களில் அமைதிக்காக பலர் வந்து சென்றனர். பின் அழகை ரசிப்பதற்கும், ஒரே இடத்தில் அனைத்தும் கிடைப்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் Cairoவை நோக்கி படையெடுக்கின்றனர்.
ஆனால் இது பெண்களுக்கு முற்றிலும் பாதுகாப்பற்ற இடமாக பதிவாகி உள்ளது. இங்கு ஹோட்டல்களில் தங்கும் பெண்களுக்கும் வெளியே செல்லும் பெண்களுக்கும் ஆண்களால் பாலியல் சீண்டல்கள் இடம்பெறுகின்றதாம், இதனால் இந்த இடம் மோசமான சுற்றுலா தளமாக பதிவாகி உள்ளது.
அடுத்து நம்ம மும்பை. இந்தியாவின் வியாபார நகரமான மும்பையில் வியாபார ரீதியாக ஏராளமான உள்ளூர் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருவதுண்டு. இங்கு வரும் வியாபாரிகள், பிச்சைகாரர்கள் மற்றும் ஏமாற்றுக் காரர்களால் அவஸ்த்தை படுகின்றனர்.
அது மட்டும் இன்றி பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப் படுவதுடன் சிலர் பாலியல் பலாத்காரமும் செய்யப் படுகின்றனர்..இது இன்னும் சில இடங்கள் பற்றி கீழ் உள்ள வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்வோம்..!!