பர்ஸில் வைக்கும் பணம் தங்குவதே இல்லையா.? சேமிக்க முடியாமல் உள்ளதா.? தயவு செய்து உங்கள் பர்ஸில் இதை வையுங்கள்..!!
இன்றைய காலத்தில் அனைவருமே பணத்தை தேடி ஓடிக் கொண்டிருக்கின்றோம், பணம் என்ற ஒன்று இல்லாவிட்டால் மதிப்பும் இல்லை, வாழ்வதற்கு வழியும் இல்லை. ஆனால் என்ன தான் ஓடி ஓடி பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணம் தங்காமல் வீணாக செலவானால் யாரால் தான் தாங்கிக் கொள்ள முடியும். ?
பணத்தை சேமிக்கவே அனைவரும் ஆசைப் படுவோம், இன்று நாம் பார்க்கப் போவது பர்ஸில் எப்போதும் பணம் நிறைந்து இருக்கவும், வீணாக பணம் செலவாகாமல் இருக்கும் வழியை தான். நீங்கள் பணத்தை பர்ஸில் சேர்த்து வைப்பது பற்றி தான். நீங்கள் பாவிக்கும் பர்ஸ்.
பர்ஸின் நிறம் பலரும் தனிக் கறுப்பில் பயன்படுத்துவதுண்டு. ஆனால் கறுப்பு நிறத்தில் பர்ஸ் பயன்படுத்தாதீர்கள். கறுப்பு நிறம் கலந்திருந்தால் பிரச்சனை இல்லை. அடுத்து பர்ஸில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் வைக்காமல் துடைக்காதீர்கள், அதன் பின் நீங்கள் எவ்வளவு வைத்தாலும் சேமிக்க முடியாமல் போகும்.
அடுத்து வீட்டில் கற்பூர வள்ளி இலை இருந்தால் சிறிய துண்டு ஒன்றை வைத்து விடுங்கள். இதன் நறுமணத்திற்கு பணவரவு அதிகமாக இருக்கும். அடுத்து அரிசி மூன்று எடுத்து பர்ஸில் வைத்து விடுங்கள். அரிசி லக்ஷ்மியாகும் அதனால் அரிசி இருக்கும் பர்ஸ் வெறுமையடையாது. அதே போல் வீட்டில் பச்சை கற்பூரம் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள், இதனை வெள்ளை துணியில் சுற்றி பர்ஸி வைத்து விடுங்கள், இதுவும் பணத்தை சேமிக்கும்..!!