பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சில முயற்சிகளை மேற்கொள்ளும் சிங்கப்பூர்…!!!
சிங்கப்பூரில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். உலகளவில் பார்த்தால் சிங்கப்பூரில் இயற்கைக்கு விளையும் கேடுகள் மிகவும் குறைவு என தெரிவித்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் தொடர்பாக அனைத்துலக அளவில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் சிங்கப்பூர் முழு ஒத்துழைப்பை வழங்கிறது. அதனை தொடர்ந்து கரியமில வாயு வெளியேற்றுவதற்கு வரி விதித்த முதல் தென் கிழக்காசிய நாடு சிங்கப்பூராகும். 2030க்குள் அதைக் கணிசமாக அதிகரிக்க திட்டம் உள்ளது.
சிங்கப்பூரில் 95 விழுக்காட்டு மின்சாரம் இயற்கை எரிவாயுவில் இருந்து வருகின்றது. எரிசக்தித் திறனைத் தொடர்ந்து அதிகரித்து வரும் தொழில்துறைகள், சூரியசக்திப் பயன்பாட்டை அதிகரிக்கப் புத்தாக்க முறைகளை நடைமுறைப்படுத்துதல், 2040க்குள் மாசற்ற எரிசக்தியைப் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் உருவாக்கவுள்ளனர்.
2030க்குள் 80 விழுக்காட்டுக் கட்டடங்கள் பசுமை முத்திரையைப் பெறப்பட்டிருக்கும்.
கழிவுகளைக் குறைக்க நிலையான தீர்வுகள் தொடர்ந்து ஆராயந்து வருகின்றனர்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.