விதியின் சதியால் இறந்துபோன அப்பாவி ஜோடி.! 15 பேரின் மரணத்திற்கு உண்மையான காரணம் இவர் தானாம்.!!
பதுளை பசறையில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 15 பேர் மரணமடைந்த நிலையில் இன்னும் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலையில் குறித்த பஸ்ஸில் ஏற்கனவே பயணம் செய்த பலர் இந்த விபத்துக்கு காரணம் பேரூந்தின் சாரதி மட்டுமே என கூறி வருகின்றனர். 200 அடி பள்ளத்தில் பேரூந்து விபத்துக்குள்ளான போதும் சாரதி சிறிய அளவான காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.
இது குறித்து விபத்துக்குள்ளான பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் கூறுகையில் அதி வேகமாக செல்லும் சாரதியிடம் மெதுவாக போக கூற முடியாது, அப்படி கூறினால் நடத்துனர் சொல்லும் ஒரே வார்த்தை டிக்கெட் பணத்தை தருகிறோம் இறங்கி நடந்து போங்கள் என்பதாகும்.
குறித்த பஸ்ஸில் பயணித்தது பற்றி நபர் ஒருவர் பேஷ்புக்கில் போட்ட பதிவொன்றில் அதிக வேகமாக சென்று அடிக்கடி குறித்த சாரதி பிரேக் போட்டதால் கோபப்பட்ட பெண் ஒருவர் பேரூந்தின் உரிமையாளருக்கு கால் செய்து பஸ்ஸில் பயணம் செய்வது பாதுகாப்பில்லை என கூறினார், இதனை தொடர்ந்து உரிமையாளர் சாரதியை எச்சரித்தார்.
இதனால் கோபமடைந்த சாரதி 2 மணி நேரத்தில் செல்லும் பயணத்தை ( இரத்தினபுரியில் இருந்து கொட்டாவ ) சுமார் 5 மணி நேரம் வரை மெதுவாக சென்றார். அன்றைய தினம் பலரால் பணிக்கு செல்ல முடியாமல் போனது என தெரிவித்துள்ளார். மரணமடைந்தவர்களின் சடலம் இன்றைய தினமும் அடக்கம் செய்யப் படுகின்றது. இதில் திருமணமாகி சில வருடங்கள் மட்டுமே ஆனா ஜோடியும் அடங்கும்.
இவர்கள் குறித்த பஸ்ஸை விட்டுவிட்டனர், இருப்பினும் அந்த பஸ்ஸில் போனால் தான் பதுளை வைத்திய சாலைக்கு வேகமாக செல்ல முடியும் என கூறி குறுக்கு ரோட் வழியாக ஆட்டோவில் வந்து பஸ்ஸில் ஏறியுள்ளனர். இறுதியில் நிரந்தரமாக சென்று விட்டனர். இதை தான் விதி என்பது.!