2வது திருமணம் பற்றி பேசிய நடிகை பவ்னி ரெட்டி! சோகத்தில் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் அதிக ஆதரவை பெற்று பின்னர் ஆதரவை இழந்தாலும் பைனல் வரை போராடி வந்து மூன்றாம் இடத்தை பெற்றவர் பவ்னி ரெட்டி. சீரியல்கள் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமான பவ்னி ரெட்டி தொலைக்காட்சியில் உடன் பணிப்புரிந்தவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
ஆரம்பத்தில் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்த போதும் பின்னர் இரு வீட்டினரும் ஏற்றுக்கொண்டனர். திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்து ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் சிறு கணவன் மனைவி சண்டையில் பவ்னியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதில் இருந்து மீள முடியாமல் தவித்த பவ்னி சில வருடங்கள் இந்தியாவை விட்டே சென்று விட்டார். பின்னர் மீண்டும் வந்து சீரியலில் நடிக்க ஆரம்பித்த போதே பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்து கலந்து கொண்டார். வெளியே வந்த பவ்னியிடம் ரசிகர்கள் எப்போது திருமணம் என கேட்டு வந்தனர்.
இதற்கு பதில் அளித்துள்ள பவ்னி போதும் எனக்கு இனி திருமணமே வேண்டாம். இப்போது 35 வயதாகிறது,2வது திருமணம் என்பதை என்னால் இனி நினைக்க முடியாது. என் வாழ்க்கை இனி சினிமாவுடன் தான். என தெரிவித்துள்ளார் தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது!