கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்ட இலங்கை சுகாதார அமைச்சர் பவித்ரா அவர்களின் தற்போதைய நிலை !
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டு கொழும்பு ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குணமடைந்து வருவதாக வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இது வரை 65 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 325 பேர் மரணமடைந்துள்ளனர். இலங்கை முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ள போதும் இதனை மக்கள் சாதாரணமாக கடந்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது அவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா வைரஸில் இருந்து தற்போது குணமடைந்து வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது..!!