திருமணமாகி 1வருடத்தில் முதல் கணவர் மரணம், நிச்சயதார்த்தம் வரை வந்து நின்று போன இரண்டவது திருமணம்.பிக் பாஸ் பவ்னி ரெட்டி வாழ்வில் நிஜத்தில் நடந்தது இது தான்.!
4 வருட லிவிங் டுகெதர் வாழ்க்கை, ஆசை ஆசையாக திருமணமாகி ஒரு வருடத்தில் கணவரின் இழப்பு பிக் பாஸ் சீசன் 5ல் சின்னப் பிள்ளை போல் இருக்கும் பவ்னி ரெட்டியின் வாழ்க்கை பார்ப்பவர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
காதலித்த கணவர் போதும் உறவுகள் வேண்டாம் என உதறி தள்ளிவிட்டு கனவுகளோடு வாழ்க்கையை ஆரம்பித்தவருக்கு கணவரின் மரணம் எத்தனை காயத்தை கொடுத்திருக்கும். பவ்னி ரெட்டி கணவர் இறந்த போது நான் அழவே இல்லை, ஏன் என்னைவிட்டுச் சென்றாய் என்று கோபப் பட்டேன் என்ற போது அவரது வலியை அனைவராலும் உணர முடிந்தது.
கணவரின் மரணத்தின் பின் இணைய தளங்களில் பவ்னி ரெட்டி திருமணம் செய்துகொள்ளப் போவதாக செய்திகள் வெளியானது. கணவரின் தாய் மற்றும் உறவினர்கள் மற்றும் தனது தாய் தந்தையின் விருப்பத்தின் பேரில் 2வது திருமணத்திற்கு பவ்னி தயாராகி இருந்தார்.
அவரது ரசிகர்கள் பலருக்கு பவ்னி ரெட்டி 2வது திருமணம் செய்துகொண்டார் என்றே தெரியும். நேற்றைய தினம் எனக்கு இரண்டாவதாக திருமணம் பேசி அதுவும் நடக்கவில்லை, நான் தனியாக வாழ தயாராகிவிட்டேன் என பவ்னி ரெட்டி கூறி இருந்தார்.அப்படியானால் பவ்னி திருமணம் செய்யவில்லையா என தேடிப் பார்த்த போது , பவ்னியின் கணவரின் நண்பரான ஆனந்த் என்பவரையே திருமணம் பேசியுள்ளனர்.
முதலில் ஆனந்தின் வீட்டில் சம்மதம் தெரிவித்திருந்த போதும் பின்னர் வேண்டாம் என கூறியதுடன் திருமணத்தை நிறுத்தியுள்ளனர். நிச்சயதார்த்தம் வரை வந்து திருமணம் நின்ற நிலையில் மனதளவில் பாதிக்கப் பட்டுள்ளார் பவ்னி ரெட்டி. இதன் போது கிடைத்த வாய்ப்பு தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் அவருக்கு நல்ல மாறுதல் கிடைக்கும் என நம்புவோம்.!!