தம்பியின் கண்முன் துடிதுடித்து இறந்து போன அண்ணன்.! இளைஞர்களே இந்த விடயத்தில் ஜாக்கிரதை.!!
தம்பியின் கண்முன்னே அண்ணன் துடிதுடித்து இறந்த சம்பவம் ஒன்று இலங்கையில் புத்தல பெல்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு இறந்துள்ளார். குறித்த இளைஞர் தனது தம்பி மற்றும் உறவினர் ஒருவருடன் மோட்டர் வாகனத்தில் அதிவேகத்தில் பயணித்துள்ளார்.
அதிக வேகம் காரணமாக வாகனத்தை கட்டுப் படுத்த முடியாமல் சென்றுள்ளது, வாகனம் வீதியை விட்டு விலகிச் சென்றதுடன் வீதியின் அருகில் நின்ற மரத்தில் அதி வேகமாக மோதியுள்ளது. இந்த விபத்து பெல்வத்தை சீனி நிறுவனத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது,
விபத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். குறித்த இளைஞரின் தம்பி மற்றும் உறவினர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இது குறித்த மரணமடைந்த இளைஞரின் தம்பி கூறுகையில் என் அண்ணா என் கண்முன் துடிதுடித்து இறந்த போது என்னால் காப்பாற்ற முடியவில்லை, இந்த குற்ற உணர்வு நான் சாகும் வரை இருக்கும் என தெரிவித்துள்ளார்.!