தலையில் பேன் கடியால் தொல்லையா.? என்ன மருத்துவம் செய்தாலும் குறையவில்லையா.? ஒரு முறை இதனை செய்து பாருங்கள்.! அதிகம் பகிருங்கள்!!
பேன் தொல்லை என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இருக்கிறது, பள்ளி செல்லும் சிறுமிகளுக்கு தான் இந்த பேன் தொல்லை அதிகம் இருக்கிறது. இவர்களுக்கு பேன் மருந்து பயன்படுத்தும் போது அவதானமாக இருக்க வேண்டும் காரணம் கொஞ்சம் தவறானாலும் வளரும் குழந்தைகளின் தலைமுடி உதிர ஆரம்பித்துவிடும்.
இதனால் இன்று நாம் பயன்படுத்தப் போகும் மருந்தானது பெரியவர் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் பயன் தரக்கூடிய அதே நேரம் பக்கவிளைவுகள் இல்லாத மருத்துவ குறிப்பை தான். இதற்கு தேவையானவை: தண்ணீர் சிறிதளவு, உப்பு தூள் 2 கரண்டி, வினாகிரி 3 கரண்டி. இவ்வளவு தான்.
இதனை எப்படி செய்வது என பார்க்கலாம்..முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் உப்பை போட்டு நன்றாக கரையுங்கள். உப்பு கரைந்து உப்புத் தண்ணீர் ஆனதும் அதில் வினாகிரி என்கிற வினிகரை விட்டு நன்றாக மிக்ஸ் செய்யுங்கள்.
இப்போது இந்த நீரை உங்களிடம் இருக்கும் ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இதனை தலை முழுவதும் ஸ்ப்ரே செய்து மசாஜ் செய்யுங்கள். அதன் பின் துணி ஒன்றை எடுத்து தலையை சுற்றி கட்டிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரம் அப்படியே விட்டு விட்டு வீட்டில் இருக்கும் சிறிய பல்லு சீப்பினால் நன்றாக தலையை சீவுங்கள்.
இப்போது பேன் ,ஈர், உட்பட பொடுகும் கொட்டிவிடும். அதன் பின் மெல்லிய ஷான்பு போட்டு குளியுங்கள்… அவ்வளவு தான். உப்பு நீர் மற்றும் வினிகரால் உங்கள் தலை முடிக்கு எதுவும் ஆகாது அதனால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்..!