பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்தது “டைனோசர்” முட்டைகளா.? அங்கு என்ன நடக்கிறது.? இதோ முழு விபரம்.!!
பெரம்பலூர் குன்னம் கிராமம்,வெங்கட்டான் குளத்தின் ஏராளமான டைனோசர் முட்டைகள் கிடைத்ததாக கடந்த சில நாட்களாக செய்திகள் வைரலானது. இதனை அனைத்து ஊடகங்களும் தலைப்பு செய்தியாக வெளியிட்டன.
இது தொடர்பாக உறுதியான தகவல் எதுவும் கிடைகாத நிலையில் இந்திய புவியியல் ஆய்வாளரான நிர்மல் ராஜா மீடியாக்களை நேற்றைய தினம் சந்தித்துள்ளார். டைனோசர் முட்டைகள் தொடர்பாக கேட்கப் பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள நிர்மல் ராஜா, பெரம்பலூரில் கண்டுபிடிக்கப் பட்டது டைனோசர் முட்டைகள் கிடையாது,
இவை கடல்வாழ் உயிரினங்களின் படிமங்களாகும், உருண்டை வடிவில் தோண்டத் தோண்ட ஏராளமான படிமங்கள் கிடைக்கப் பெற்றது, இதனை பார்த்த மக்கள் டைனோசர் முட்டை என ஊகித்துக் கொண்டுள்ளனர்.
சிறு பொருள் இருந்தால் கூட அவற்றை சுற்றி சேரும் தாதுப் பொருட்களை அவற்றை உருண்டையாக காட்டுகிறது, இது சாதாரண ஒன்றாகும், இதனை வைத்து குன்னூரில் டைனோசர் வாழ்ந்தாக கணிப்பிடவோ முடியாது. தொடர்ந்து ஆய்வுகள் இடம்பெற்று வருகிறது, மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்..!!