பெற்றோல் நிலையம் வெடித்துச் சிதறியது – 15 பேர் படுகாயம்..!!
கம்போடியாவில் பெற்றோல் நிலையத்தில் திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த இரு ஆசிரியைகள் படுகாயமடைந்தனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஸோ எல்ஃப்தரியு (Zoe Eleftheriou) மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த அபிகெயில் (Abigail) ஆகியோர் கம்போடியாவிற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த போது இவர்கள் இருவரும் அங்கிருந்த பெற்றோல் நிலையத்தில் தங்கள் வாகனங்களுக்கு பெற்றோல் போட்டுக்கொண்டு இருந்த வேளையில் திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த வெடிவிபத்தில் இருவரும் படுகாயமடைந்தனர். பெற்றோல் நிலையத்தில் இருந்த மேலும் 13 பேரும் இந்த விபத்தில் காயமடைந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ஆயிரத்து 665 லிட்டர் பெற்றோல் நொடிப்பொழுதில் ஆவியானது.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.