” என் கனவில் வந்து நீ இதை எல்லாம் செய்தாய் ” ஜெபத்திற்கு சென்ற பெண்ணிடம் அத்துமீறிய மதபோதகர்..! இணையத்தில் வைரலான ஓடியோவால் அதிர்ச்சி..!!
மத போதகர் ஒருவர் பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்து அரவேனு “பெதஸ்தா சபை” என்கிற மத வழிபாட்டு தலத்தில் மத போதகராக இருப்பவர் அசோக் ஸ்டீபன்.
58 வயதாகும் இவர் குறித்த சபைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சேட்டை செய்வதுடன் அவர்களிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சிப்பதாக பொலீஸில் புகார்கள் குவிந்துள்ளது. வீட்டில் இருக்கும் பிரச்சனைகள் தீர என பெண்கள் ஜெபம் செய்வதற்காக செல்லும் போது ஸ்டீபன் அவர்களிடம் நேற்று நீ என் கனவில் வந்து எனக் கூறி தகாத முறையில் நடந்துகொண்டாய் தகாத வார்த்தைகள் பயன்படுத்தி வந்துள்ளார்.
பாதிக்கப் பட்ட பெண்களிடம் விசாரணை செய்த போது கடவுளின் பெயரை கூறி வீட்டு கஷ்டம் தீர்ப்பதாக கூறி சில இடங்களுக்கு அழைத்துச் சென்று வீடியோ எடுத்ததும் தெரிய வந்துள்ளது. அதனை வைத்து மிரட்டல் விடுப்பதும் தெரியவந்துள்ளது..
இவருக்கு எதிராக பல புகார்கள் இருந்த நிலையில் ஸ்டீபன் பேசிய ஓடியோக்களும் வைரலானது, இதனை தொடர்ந்து ஸ்டீபனை கைது செய்த பொலீஸார் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி குன்னூர் சிறையில் அடைத்துள்ளனர், இது தொடர்பாக விசாரனைகள் இடம்பெற்றுள்ளது…!