2 நிமிடங்கள் கண்ணீர் விட்டு அழுங்கள் உறவுகளே..! ஏன் தெரியுமா.? இதை படியுங்கள் புரியும்..!!
சிலருக்க எவ்வளவு துன்பம் வந்தாதும் வாய்விட்டு அழமாட்டார்கள் மனதுக்குள்ளேயே அழுவார்கள். அது உடலுக்கு நல்லதல்ல அழும்போது வாய்விட்டு அழவேண்டும். அதுவே உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.
அழும்போது வழியும் கண்ணீர் கண் இமைகள் மற்றும் விழிகள் இடையே வழியும் அப்போது விழிகளை சுத்தம் செய்ய உதவுகிறது. மற்றும் இது பார்வையை தெளிவாக்கவும் பயன் தருகிறது.
இந்த கண்ணீர் துளிகள் கண்களில் உள்ள95% பக்டீரியாக்களை அகற்றுகின்றது.அழுவதால் உடல் லேசாக உணரலாம். மனது ஒரு நிலைக்கு வரும் , மனதில் தேக்கி வைத்தால் தான், உடல் ஆரோக்கியமற்று போய்விடும், வாய்விட்டு அழும் போது உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறும்.உங்கள் மனதில் இருக்கும் எதிர்மறை எண்ணங்கள் வெளியேறவும் கூட அழுகை உதவுகிறது.
தோல்வியில் துவண்டிருக்கும் சிலர் கூட, மனம் விட்டு அழுத பிறகுஇ தன்னம்பிக்கையுடன் திகழ இதுதான் காரணம்.மனதில் தேக்கி வைப்பதால் தூக்கம் குறைந்து உடல் ஆரோக்கியமற்று போய்விடும். வாய்விடடு அழுதால் மனதில் ஒரு வித்தியாசத்தை உணர்வீர்கள். தூக்கமும் நன்றாக வரும். எல்லா துன்பங்களும் சென்றது போல ஒரு உணர்வு வரும்.இயற்கையான முறையில் இரத்த அழுத்தத்தை குறைக்க சிறந்த வழியாக திகழ்கிறது அழுகை.
நீங்கள் அழுத பிறகு, உங்கள் உடலின் இரத்த அழுத்தம் சம நிலைக்கு திரும்புகிறது. மற்றும் உங்கள் உடலை இளகிய நிலையில் உணரவும் இது பயன் தருகிறது.இனிமேல் அழுகை வந்தால் அடக்க முயற்சி செய்யாதீர்கள். அழுவதால் மன அழுத்தம் நீங்கும். மனம் அழுத்தம் உள்ளவர் சத்தமாக அழவும் அது உங்களக்கு ஒரு பயிற்சியாகவும் இருக்கும்.அழுகை ஒருவரின் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறதாம். நாம் முன்னர் கூறியது போல அழுகை உங்களது உடலில் இருக்கும் நச்சுகளை அகற்றுவது, உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்க காரணமாக இருக்கிறது.