நடு வீதியில் வைத்து பெண் பொலீஸின் ஆடையை கிழித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர்.! தடுக்காமல் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்ட மக்கள்.!!
பிரதான வீதியில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் பொலீஸின் ஆடையை.கிழித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற.இளைஞரை பொலீஸார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள பிஜ்னோறில் உள்ள வீதியில் பெண் பொலீஸார் இருவர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த பகுதியில் ஈவ் டீசிங் அதிகம் இதனால் இளைஞர்களிடம் குறித்த பெண் பொலீஸ் கடுமையான முறையில் நடந்துகொள்வது வழக்கம். நேற்றைய தினம் பணியில் ஈடுபட்டிருந்த போது இளைஞர் ஒருவர் மாஸ்க் போடாமல் வீதியில் அடிக்கடி சென்றுள்ளார். இதனை கவனித்த பெண் பொலீஸ் குறித்த இளைஞரை நிறுத்தி விசாரணை செய்ய முயன்றுள்ளார்.
திடிரென பென் பொலீஸ் மீது பாய்ந்த இளைஞர் அவரது ஆடைகளை கிழித்து அணைத்து முத்தம் கொடுக்க முயன்றுள்ளார். உதவிக்கு நின்ற மற்றைய பெண் பொலீஸ் உதவ முயன்ற போது அவரது உடையையும் கிழித்துள்ளார். குறித்த இளைஞரால் பெண் பொலீஸார் பாலியல் வன்கொடுமை செய்யப் படும் போது வீதியில் சென்றவர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுத்த நிலையில் ஒருவர் கூட உதவவில்லை,
சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் குறித்த இளைஞரை கைது செய்யும் வரை மக்கள் வீடியோ மட்டுமே எடுத்துள்ளனர். குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாக பலரும் குறித்த பகுதி மக்களுக்கு எதிராக தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.!